இயேசு வந்துவிட்டார் - 2


இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 

இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 

‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 

“இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 

எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே..... அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 

‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 

மேலும். ‘........... அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 

மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.

கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘............உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக........’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்..........’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 

மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 

இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 

இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 

இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.

இரண்டாவது இயேசு வந்து விட்டார் -1


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன் வானத்திலுருந்து எல்லோருடைய கண்களும் காணும்படி வெளிப்படையாக தோன்றுவதாக இருந்தால், அவர் எக்காளச் சத்தத்தோடு தமது தூதுவர்களை அனுப்புவதாக இருந்தால், இவ்வுலகில் உள்ள எந்த மனிதனும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. வானத்திலிருந்து மேகங்கள் சூழ மனுஷ குமாரன் இறங்கி வருவது யாருடைய கண்களுக்குத்தான் தெரியாமல் போகும்? அப்படி எவனாகிலும் ஒருவன் மனுஷ குமாரன் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் அவனை மானிடப்பிறவி என்று நாம் எவ்வாறு கூறமுடியும். 

இறைவன் கையாளும் வழிகள் இப்படிப்பட்டவை அல்ல, நல்லவர்களையும், தீயவர்களையும் பிரித்தறிவதற்காக இறைவன் சில ஒழுங்குமுறைகளை செய்திருக்கின்றான். அவற்றின்படி நல்லவர்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கெட்டவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள், நேர்மையாளர்களையும், நெறிதவறியவர்களையும் இவ்விதம் பிரிதரிந்தால் தான் (எல்லா வேத நூற்களிலும் சொல்லப்பட்டபடி) அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ கொடுக்கமுடியும். இவ்விதம் பிரித்தறியாவிட்டால், தண்டனை பெறுவோரும், வெகுமதியடைவோரும் ஒன்றாக அல்லவா கருதப்படவேண்டும்? அப்படியானால், ஒருவன் எத்தனையோ சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உட்பட்டு தேடிய நற்கருமங்களுக்கு இறைவன் ஒரு பலனையும் தரமாட்டன் என்றும், ஒருவன் எப்படிப்பட்ட தீய வழியை பின்பற்றியிருந்தாலும், எத்தகைய கொடுமை இழைத்திருந்தாலும் அவனுக்கு எவ்வித தண்டனையும் கிடையாதென்றும் , மனுஷ குமாரன் வானத்திலிருந்து எக்காளமிட்டுக்கொண்டே தோன்றும் காலத்தில் இவ்விருசாராரையும் இறைவன் ஒன்றாகவே பாவிப்பான் என்றும் நாம் கூறவேண்டியதிருக்கும்.

மனுஷ குமாரன் இவ்விதம் பகிரங்கமாக எக்காளச் சப்தமிட்டு உலகத்தில் இருப்போர் அத்தனைபேரையும் தட்டி எழுப்பச் செய்வாரென்றும், அவர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டு மேகங்களிலிருந்து கீழே இறங்கி வருவார் என்றும் பிரசாரம் செய்யும் கிருஸ்தவர்கள் கீழ்க் கண்ட வேதாகம வாக்கியங்களை ஏன் மறந்துவிடுகிறார்கள்? என்பது நமக்கு விளங்கவில்லை.

"மனுஷ குமாரன் வரும் நாளையும், நாழிகையையும் நீங்கள் அறியாதிருக்கிற படியால் விழித்திருங்கள். (மத்தேயு 25:13)

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டு எஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கண்காணிப்பான் என்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்: ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் ." (மத்தேயு 24:42-44)

"அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து..." (மத்தேயு 24:60)

இவ்வாக்கியங்களிளிருந்து ஒரு திருடனைப்போல் சப்தம் செய்யாமல் அமைதியாக வந்து சென்று விடுவாரென்றும், அவர் வருகின்ற நாளும் நாழிகையும் மக்களுக்கு தெரியாதென்றும் புலப்படுகின்றது.

"அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகிந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." (மத்தேயு 24:30) 

என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது உண்மையே, நாம் முன்னர் கூறியபடி இந்த வாக்கியத்திலுள்ள ஆழிய கருத்தை ஆராய்ந்து உணராமல் ஆதிகால யூதர்கள் செய்தது போன்றே மேலெழுந்த வாரியான அர்த்தம் கற்பித்து உண்மையான கருத்தை கைநழுவ விட்டுவிட்டார்கள், நமது மதிப்பிற்குரிய சகோதரர்கள்.

யூதர்கள் ஒரு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை வைப்பதற்காக, முந்தைய வேதத்தில் சொல்லப்பட்ட படி ஒரு எலியாவை (இலியாஸ்) வானத்திலிருந்து எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தப்படி எலியா வானத்திலிருந்து இறங்கி வராமல் அவர்களுக்கு மத்தியிலேயே ஒரு சாதாரண மனிதனாக ஒரு யோவானாக தோன்றியதால், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்து யூதர்களின் ராஜா வாகத் தோன்றுவார் என்று யூதர்கள் நம்பியிருந்தார்கள். ஆகவே ஒரு ஏழை நாசரேயனாகிய ஏசுவைக் கிறிஸ்துவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .

இயேசு தம்மைக் 'கிறிஸ்து' வாக வாதிடும் காலத்தில் யூதர்கள் அவரை நோக்கி: "கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா வானத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே, அவர் இன்னும் வரவில்லையே என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா தோன்றுவார் என்பது உண்மையே. ஆனால் எலியா தோன்றிவிட்டார். யோவான் தான் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா என்று இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறிவிடவில்லையா?

இதன்படி, யூதர்கள் எண்ணி இருந்ததைப்போல, எலியா வானத்திலிருந்து ஒருபோதும் தோன்றமாட்டார் என்பதும் எலியாவின் ஆவியிலும் பலத்திலும் மற்றொருவரே தோன்றுவார் என்பதும், அந்த மற்றொருவர் யோவானே என்பதும் நிரூபணம் ஆகிவிடவில்லையா? இயேசு கிறிஸ்து இப்படி கூறியதால் முந்திய வேதங்களிலுள்ள வாக்கியங்கள் பொய்யாகி போய்விட்டனவா? இல்லையே! பின்னர் யூதர்கள் ஏன் இயேசுவின் சொற்களை ஏற்றுக்கொள்ளாமல், எலியா இன்னும் வானத்திலிருந்து தோன்றவில்லை, ஆகவே கிறிஸ்து என்று வாதிடும் இந்த இயேசு ஒரு கள்ள தீர்க்கதரிசி தான் என்று முடிவு செய்து அவரை சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாக்க விரும்பி, சிலுவையில் அறைந்து கொடுமை செய்தார்கள்?

"இவ்வளவு பெரிய கொடுமையையும், தவற்றையும் யூதர்கள் செய்ததற்கு காரணம் என்ன ஒரேஒரு காரணம்தானே!

வேத வாக்கியங்களை அப்படியப்படியே மேலெழுந்த வாரியாக அவற்றின் சொற்பொருள்படி யூதர்கள் பின்பற்றினார்கள்; அவ்வாகியங்களில் பொதிந்துள்ள கருத்தை அவற்றில் சொல்லப்பட்ட விசயங்களை பின்பற்றவில்லை. யூதர்கள் எலியா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் இளைத்த துண்பம்களுக்கெல்லாம் இதுதான் மூல காரணம். வேத வாக்கியங்களில் நிறைந்துள்ள வார்த்தைகளை யூதர்கள் பின்பற்றினார்கள்: அவற்றின் அடியிலுள்ள விஷயத்தை விட்டுவிட்டார்கள். கிருஸ்தவர்கள் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் வேதாகமத்திலேயே இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது. பிறகு எவ்வாறு கிறிஸ்தவர்களால் இதனை மறுத்துக் கூறமுடியும்?

எப்படியிருப்பினும், அப்பலங்கால யூதர்கள் செய்த தவற்றையே அறிவியல் அறிவு மிகுந்த இக்காலத்தில்- கல்வி அறிவு நிறையப்பெற்ற கிருஸ்தவ சகோதரர்களும் செய்து வருவது விந்தயில்லையா? மனுஷ குமாரன் மேகங்களிலிருந்து பூமியில் வந்திறங்குவார் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதால், வானத்திலிருந்து இறங்கிவரக்கூடிய ஒரு மனுஷ குமாரனையே இவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கிறிஸ்து தோன்றும் முன்னர், எலியா, தோன்றுவார் என்று முந்தய வேத நூற்களில் சொல்லப்பட்டிருந்தும் மரணித்துப்போன அதே பழைய எலியாதான் உயிரோடு மீண்டும் யூதர்களுக்கிடையில் தோன்றினாரா? அல்லது இயேசு கிறிஸ்துதான் அந்த மூடக் கருத்தை ஆதரித்தாரா? இரண்டும் இல்லை. மரணித்துப்போன எலியா மீண்டும் தோன்றுவாரென்றால், எலியாவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்றுதான் பொருள் என இயேசு கிருஸ்துவே விளக்கிக் கூறி யூதர்களின் அறிவிற்கு புறம்பான நம்பிக்கையை இடித்துரைக்கவில்லையா?

அப்படியானால், இயேசு இரண்டாம் முறையாகத் தோன்றுவாரென்று கிருஸ்தவர்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தால், அவர்கள் வானத்தை ஏன் ஏறிட்டு பார்த்து கொண்டிருக்கவேண்டும்? இயேசு மீண்டும் வருவார் என்பதன் பொருள் இயேசுவின் வல்லமையையும் இயேசுவின் கருத்தையும் கொண்ட அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்பதுதானே பொருள்?

இயேசுவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் ஏற்கனவே தோன்றிவிட்டார். அவரே பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்னும் கிராமத்தில் பிறந்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள்! இவருடைய வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகைபற்றிய தீர்க்க தரிசனம் நிறைவேறிவிட்டது.

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றி, அதாவது மனுஷ குமாரனுடைய வருகையைப்பற்றி சொல்லப்பட்ட அடையாளங்கள் யாவும் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகையின் போது தவறாமல் நிறைவேறிவிட்டன. சில ஆதாரங்களை கீழே காண்போம்.

"அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்த காரப்படும், சந்திரன் ஒளியை கொடாதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் தத்துவங்கள் அசைக்கப்படும்." (மத்தேயு 24:29)

இயேசுவின் இரண்டாவது வருகைக்குரிய காலம் கி.பி 1873-ல் தொடங்குகிறது என்று கிருஸ்தவ வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். தமது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிறைவேறிவிட்டது என்று வாதிடும் வாக்களிக்கப்பட்ட மெசாயா ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு, இறைவனிடமிருந்து (revelation) வெளிப்பாடு கிடைத்தது. இந்த ஆண்டிலேயே என்பது குறிப்பிட தக்கது.

மனித குமாரன் தோன்றும் போது சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியை தராது, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிரும் என்று வேதாகமத்தில் கூறப்பட்டபடி, சூரிய சந்திர கிரகணங்கள் இவ்வுலகே பிரமிக்கத்தக்க அளவில் நடந்தேறின, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன. கி.பி. 1894 ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் வெள்ளிகிழமை அன்று சூரிய கிரகணமும், கி.பி. 1894-ம ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்து ஒன்னாம் நாள் வியாழக்கிழமை அன்று சந்திர கிரகணம் உண்டாயின. வாக்களிக்கப்பட்ட மெசாயா தோன்றும் காலத்திற்கு அடையாளமாக ஒரு ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு தீர்க்க தரிசனத்தின் மூலமாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அதற்கேற்பவே, நாம் மேலே குறிப்பிட்ட சூரிய சந்திர கிரகணங்கள் ஒரு ரமலான் மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தேறின. உலகம் தோன்றிய நாள் முதலாக இப்படிப்பட்ட சூரிய சந்திர கிரகண நிகழ்ச்சிகள். ஒரு மாத காலத்திற்குள் நடைபெற்றதே இல்லை என வானவியல் ஆராட்சியாளர்கள் அத்தாட்சி பகருகின்றனர். வாகளிக்கப்பட்ட மெசாயாவாகிய ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் உண்மையை வலியுறுத்த இறைவன் எத்தகைய பலமிக்க அத்தாட்சிகளை அருளியிருக்கின்றான்.

ஹாம்ஸ்வொர்த் சர்வதேச கலைக்களஞ்சியத்தில் கி.பி. 1872, 1885, 1892 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன என்ற உண்மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெற்றதைப் போன்றே, மனுஷ குமாரன் வரும் காலத்தில் மற்றொரு அடையாளமாகிய நட்சத்திரங்கள் உதிர்வதும் பிசகாமல் நடந்தேறிவிட்டது. உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவற்றைப்போன்ற இவற்றைப் போன்ற அத்தாட்சிகள் எத்தனை எத்தனையோ!

வலுவாய் தொனிக்கும் எக்காளச் சத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தில் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பார்கள். (மத்தேயு 24:31)

ஹஸ்ரத் அஹ்மத் அவர்களுடையா தூதர்கள் உலகத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று பலம் பொருந்திய இஸ்லாத்தின் போதனைகளை பிரச்சாரம் செய்து, இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை நான்கு திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டினார்கள் என்ற உண்மையை உணர்வோர் எவரும் மேற்கண்ட தீர்க்கதரிசனம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடத்தில் முழுமையாக நிறைவேறி விட்டதைகண்டு கொள்வர். இவ்வுலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அஹ்மதியா பிரச்சார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இப்னு மர்யம் பற்றி அபூ அப்தில்லாவின் தவறான கருத்து


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.

திருக்குரானில் குறிப்பிடப்படும் எந்த நபியும் அவர் இன்னாரின் மகன் என்று குன்யத்துப் பெயரால் அல்லாஹ் அழைக்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை மட்டும் இப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயரால் இறைவன் அழைப்பதன் மர்மம் என்ன? சுமார் 2000 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட அதே ஈசப்னு மர்யம் மீண்டும் உலகில் இறங்குவார் என்பதை மக்களுக்கு சந்தேகமற அறிவிக்கவே தனது திருமறையில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஈசப்னு மர்யம் என்றே குறிப்பிடுகின்றான். 

உலக நடைமுறையில் ..... சொத்துக்கள் பதியப்படும் போது நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போதும் இன்னாரின் மகன் என்று குரிப்ப்டப்படுவதைப் பார்க்கிறோம். அதற்கு அடிப்படைக் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கே ஆகும். அதாவது இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிட்டால் அது குறிப்பாக ஒரே ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகும். இதன் காரணமாகவே முஹம்மது என்ற பெயரை மற்றவர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்த நபி (ஸல்) அவர்கள் தனது குன்யத்துப் பெயரான அபுல் காஸிம் என்ற பெயரை மற்றவர்களுக்கு வைப்பதைவிட்டும் தடுத்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி) 

உலக வரலாற்றில் யாரும் ஈஸா (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் அல்லர். 

காதியானிகள் சொல்வதுபோல் ஈசப்னு மர்யத்தைப் போன்ற குணாதிசியங்கள் உடைய இந்த உம்மத்தில் தோன்றும் ஒருவர் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. காதியானிகள் நபியாக ஒப்புக் கொண்டிருக்கும் பொய் நபி (நவூது பில்லாஹ் மின் தாலிக்) மிர்ஸா குலாமின் தாயார் பெயர் மர்யம் என்று இருந்தாலும் கூட இவர் தந்தையின்றி பிறக்காத காரணத்தால் மிர்ஸா குலாமை இப்னு மர்யம் என்று ஒருபோதும் சொல்லமுடியாது

ஹாதிம் தாய், அப்லத்தூன், எலியா என்னும் பெயர்களில் இன்னார் மகன் இன்னார் என்ற குறிப்பு இல்லை. ஆதலால் இப்பெயர்களை இன்னொருவருக்கு உவமையாகச் சுட்டிக்காட்டி குறிப்பிடுவதால் தவறில்லை. ஆனால் இப்னு மர்யம் என்று ஒருவரை உவமையாகக் குறிப்பிடக் கூடாது. காரணம் இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நம் பதில் : 

இப்னு மர்யம் குறித்து அல்லாஹ் கூறும் போது இஸ்முஹுல் மஸீஹ் ஈசப்னு மர்யம் அவரின் பெயர் மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும் என்று 3:46 இல் கூறுகிறான். எனவே அல்லாஹ் அவருக்கு வைத்தக் முழுப் பெயரே மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும். அதன் ஒரு பகுதியைப் பிரித்து குன்யத்துப் பெயர் எனக் கூறி கற்பனைக் கதை புரியும் இவரை என்ன சொல்வது?

ஈசப்னு மர்யம் என்று குர்ஆனில் ஒரு சொல் வருகிறதென்றால் இறைவன் ஏன் இன்னாரின் மகன் இன்னார் என்று கூறினான் என்பதற்குரிய விடை குரானிலேயே இருக்கும் அல்லது ஹதீஸிலும் கிடைக்கும். அதைப் பற்றி ஆராயாமல் அபூ அப்தில்லாஹ் அச்சொல்லுக்கு தவறான ஒரு கருத்தை தந்துள்ளார். குர்ஆனில் எந்த நபியையும் அவர் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயரால் குறிப்பிடாமல் ஈஸா (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடக் காரணம் என்ன? கிருஸ்தவர்கள் குரான் இறங்கும் கால கட்டத்தில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் நம்பினர். எனவே அவர்களுடைய நம்பிக்கையை மறுக்கவே அவரை மர்யத்தின் மகன் ஈஸா என்று கூறுகிறது

இப்னு மர்யம் என்ற சொல் திருக்குரானில் 23 இடங்களில் வருகிறது. இவ்வாறு 23 முறை அல்லாஹ், ஈஸாவை மனித குமாரன், மர்யத்தின் மகன் என்று கூறுகிறான். 

குன்யத்து தொடர்பான நபிமொழியை காண்போம். அபூ அப்தில்லாஹ் அதற்க்கு எடுத்துக் காட்டும் தந்துள்ளதால் அதனை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். 

முஹம்மது என்ற பெயரை பிள்ளைகளுக்கு சூட்டச் சொல்லிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுல் காசிம் என்ற குன்யத்துப் பெயரை பிறருக்கு சூட்டுவதைத் தடுத்திருக்கிறார்கள் என்றாலும் அதற்கு அவர் கூறும் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். குன்யத்துப் பெயர் என்றால் அது ஒரே ஒரு ஆளை மட்டுமே குறிக்கும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுகிறார். அப்துல்லாஹ் என்பவருக்கு முஹம்மது என்ற ஒரு மகன் இருந்தால் அப்துல்லாஹ் வின் மகன் முஹம்மது. அதாவது முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று கூறினால் ஆள்மாறாட்டம் ஏற்படாதா? எனவே அபூ அப்தில்லாஹ் காட்டும் ஆதாரம் அர்த்தமற்றதாகும். இது பற்றிய ஹதீஸை காண்போம். 

என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள் ஆனால் (அபுல் காசிம் என்ற ஏன் குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3537)

இதிலிருந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காஸிமின் தந்தையாக இருப்பதனால் அபுல் காசிம் என்ற பெயரைச் சூட்டக் கூடாது என்ற பொருளில் கூறவில்லை. மாறாக காஸிம் அதாவது பங்கீடு செய்பவன் என்று தன்னை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதால் அந்தப் பதவிப் பெயர் தனக்கு மட்டுமே உரியதால் அதனை பிறருக்கு வைக்க வேண்டாம் என்ற கருத்தில்தான் கூறியுள்ளார்கள். அபூ அப்தில்லாஹ் ஹதீஸைக் குறிப்பிடும் போது அரைகுறையாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே காணப்படும் கருத்தை மறைக்கிறார். 

உலக வரலாற்றில் ஈஸா (அலை) அவர்களை தவிர வேறு யாரும் தந்தையின்றி தாயாருக்கு மட்டுமே பிறந்தவர் அல்லர் என்ற கூறும் தகுதியும் ஞனமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அபூ அப்தில்லாஹ்வுக்கோ அல்லது வேறு எவருக்கும் அந்த தகுதி கிடையாது. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும்தான் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். வேறு எவரும் அவ்வாறு பிறக்கவில்லை. இனிமேல் அவ்வாறு பிறக்கமாட்டார்கள் என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அல்லாமல் வேறு ஒருவர் மர்யம் என்னும் பெண்ணுக்கு பிறந்து, ஈஸா என்று பெயர் பெற்றிருந்தால் அவரை ஈசப்னு மர்யம் என்று கூறும் உரிமை எல்லாருக்கும் உண்டு. 

மேலும் ஒருவரை மற்றவருக்கு உவமையாக ஒப்பிட்டுக் கூறும்போது இவருடைய பெற்றோர் பெயரும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்விருவருக்கும் இடையில் எத்தனைப் பற்றி ஒப்பிட்டுக் கூறுகிறோமோ அது அவ்விருவருக்கும் இடையில் ஒன்றுபோல் இருந்தால் ஒப்பிட்டுக் கூறலாம். 

எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா அதாவது அபீகப்சாவின் மகன் என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். (புகாரி) நபித்தோழர் அபூ ஸுப்யான் (ரலி)அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தை தாய் பெயர் நன்றாக தெரியும் அபீகப்சா என்பவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை இல்லை என்பதும் தெரியும். இவ்வாறு இருந்தும் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். 

இதே விதத்தில்தான்  ஈஸா (அலை) அல்லாத வேறு ஒருவர் இப்னு மர்யம் என்று ஹதீஸில் அழைக்கப்பட்டுள்ளார். திருக்குரானில் மர்யத்தின் மகன் உவமையாக எடுத்துரைக்கப்ப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனைக் குறித்து கூச்சலிடத் தொடங்குகின்றனர். இவ்வசனத்தில் இப்னு மர்யத்தை உவமையாக எடுத்துக் கூறப்படும். என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இப்னு மர்யமாக வந்து விட்டார்கள் என்று கூறும்போது அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் போடுகின்ற கூச்சலைத்தான் அல்லாஹ் அதில் கூறியுள்ளான். எனவே இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர்களை உவமையாகக் கூறக் கூடாது என்ற அபூஅப்தில்லாஹ்வின் கூற்று அர்த்தமற்றதாகி விடுகிறது. 

நபி மொழிகளில் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயர்கள் ஒரு ஆளை மட்டும் குறிப்பிடுவதற்கோ ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கோ தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் என்பதை மட்டும் குறிக்கவோ வரவில்லை. உதாரணமாக, ஹுதைபிய்ய உடன்படிக்கையில் அப்துல்லாஹ்வைன் மகன் முஹம்மது என்று எதிரிகள் எழுதச் சொன்னது முஹம்மது ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்பதை மறுப்பதர்க்காகத்தானேயொழிய ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடும் என்பதற்கல்ல. இதே விதத்தில் தான் ஈஸா கடவுளின் மகன் இல்லை. அவர் மர்யத்தின் மகன் ஆவார் என்று கிறித்தவ கடவுள் கொள்கையை மறுக்கவே இப்னு மர்யம் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்விடத்தில் இன்னொரு கருத்தையும் விளக்க விரும்புகிறேன். அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 12 இல் 4:157 அல்லாஹ் ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது) என்று குறிப்பிடுகிறான் (காதியானிகளோ அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என பொருள் கொள்கின்றனர்) என்று எழுதியுள்ளார். அதாவது சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா (அலை) இல்லை என்றும் யாரோ ஒரு அப்பாவி இரையாக்கப்பட்டான் என்றும் அபூ அப்தில்லாஹ் நம்புகிறார். 

இதற்க்கு நபிமொழி வரலாற்று சான்றுகள் எதுவும் தரவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். குன்யத்துப் பெயர் பற்றி அபூ அப்தில்லாஹ் மேலே எழுதியிருப்பதில் ஆள்மாறாட்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்குத்தான் அல்லாஹ் ஈசப்னு மர்யம் என்று – இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர் வைத்துள்ளான். என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். அதாவது ஆள் மாறாட்டம் ஏற்படுவதை ஒரு சொல்லின் மூலம் அல்லாஹ் தடுத்துவிட்டான் என்கிறார் அவர். 

அல்லாஹ் ஆள்மாறாட்டம் ஏற்படக் கூடாது என்று கருதியே ஈசப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயர் வைத்தான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ், அல்லாஹ் தன் செயல் மூலம் ஆள்மாறாட்டம் செய்வான். என்றும் அதனை ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம்) செய்யப்பட்டது என்ற சொல் விளக்குகிறது என்றும் நம்புவது முரண்பாடாக இல்லையா? 

ஆள்மாறாட்டம் என்பது உலகில் எத்தனை பெரிய குற்றம். அவமானம், தலை குனிவு, அச் செயலை அல்லாஹ் செய்துள்ளான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ்களை அல்லாஹ்தான் மன்னிக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு இதனை விட அவமானும் களங்கமும் கேவலமும் (நவூதுபில்லாஹ்) இருக்கமுடியுமா? 


அச்சொல்லுக்கு அவருடைய நிலைமை சந்தேகத்திற்கு உரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது, என்று மௌதூதியும் அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர் என்று அப்துல் ஹமீது பாக்கவியும் நாங்கள் கொண்ட பொருளையே கொண்டுள்ளனர். இதுவே சரியான பொருள் அல்லது “But he was made to appear to them as such” – (Mohammed Ali) என்று பொருள் கொள்ளலாம்.

சிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா?


சிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்றபோது, இறைவன் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வேறொரு நபருக்கு ஈசாநபி (அலை) அவர்களின் உருவத்தைக் கொடுத்தான் என்றும் அந்த நபரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் திருகுரானிலோ, நம்பகமான நபிமொழிகளிலோ இந்தக் கருத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. என்றாலும் அந்தக் காலத்து திருக்குர்ஆன் விரிவுரையாளரான தபரி முதல் இந்தக் காலத்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளரான ஆ. கா . அப்துல் ஹமீது பாகவி வரை பல்வேறு விரிவுரையாளர்களும். மொழி பெயர்ப்பாளர்களும் தம்முடைய நூல்களில் இந்தக் கட்டுக் கதையை கூறியுள்ளனர்.

இந்தக் கதை, ஆரம்பகாலத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய யூதர்களாலோ, கிறிஸ்தவர்களாலோ புனையப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இந்தக் கதையை கூறுகின்றவர்கள் எல்லாம் இந்தக் கதைக்கு அறிவிப்பாளர்களாக மதம் மாறிய யூதர்களையோ, கிறித்தவர்களையோதான் குறிப்பிடுகின்றனர். தபரி என்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஈசா நபிக்கு பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையபெற்றார் என்ற கூற்றுக்கு அறிவிப்பாளராக ஹைப் என்ற யூதரையே குறிப்பிட்டுள்ளார். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்கள் தமது பதினேழு சீடர்களுடன் ஓர் அறையில் இருந்ததாகவும் அதில் ஒருவர் ஈசா நபி போல் இறைவனால் உருமாற்றப்பட்டதாகவும். அவரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதாகவும் இந்த வஹப் கூறியுள்ளார்.

இந்தக் கட்டுக்கதை தோன்றுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,

...... அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை சிலுவையில் அறைந்துகொள்ளவுமில்லை......." (4:158) 

என்ற திருக்குர்ஆன் வசனம் புரியாத புதிராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டது நடந்தேறிய ஒரு உண்மை நிகழ்ச்சி. ஆனால் திருக்குரானோ ஈசா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று கூறுகிறது. இந்தப் புதிருக்கு விடையாக மேற்கண்டகட்டுக்கதையை இவர்கள் புனைந்து கூறியுள்ளனர். சிலுவை சம்பவம் உண்மையில் நிகழ்ந்த ஓன்று. ஆனால் அறியப்பட்டது ஈசா நபி அல்ல. மாறாக அவர்களின் உருவத்தைப் பெற்ற இன்னொருவரே என இவர்கள் கூறினார். 

ஈசா நபிக்குப் பகரமாக அப்பாவியான இன்னொருவர் சிலுவையில் பலியிடப்பட்டாரா? ஈசா நபியை காப்பாற்ற இந்த நியாயமற்ற செயலை இறைவன் செய்தானா? என்ற கேள்வி சிந்திக்கின்ற எவருக்கும் எழும். 

இப்படிப்பட்ட கேள்விகள் எழுமே என்ற எண்ணம் இந்தக் கதையைப் புனைந்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும். இதற்காக இன்னொரு துணைக் கதையையும் கூறியுள்ளார்கள். க அதா என்பவரின் கூற்றை ஆதாரமாகக் காட்டி தபரி கீழ்வருமாறு கூறுகிறார்:

"மரியமின் மகன் ஈசா நபி(அலை) அவர்கள் தங்களின் தோழர்களை நோக்கி எனது தோற்றத்தைப் பெற்று சிலுவையில் கொல்லப்பட உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்களில் தோழர்களில் ஒருவர் இறைவனின் தூதுவரே, நான் அதற்குத் தயார் என்று பதில் அளித்தார். இவ்வாறு அந்த நபர் கொல்லப்பட்டார் இறைவன் தனது தூதரைப் பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக்கொண்டான். (தி முஸ்லிம் வேர்ல்ட் வால்யும்70 எண், 2 பக்கம் 97 ) 

இப்னு இஷ்ஹாக் என்பவரும் தமது வரலாற்று நூலில் இந்த ஆள்மாறாட்ட கதையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பலியானவர் ஈசா நபியின் தோழர்களில் ஒருவரன்று, மாறாக சர்கஸ் என்பவரே எனக் கூறுகின்றார். இதே இப்னு இஷ்ஹாக் இன்னோரிடத்தில் பலியானது யூதாஸ் எனக்குறிப்பிட்டு அதற்கு அறிவிப்பாளராக கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரைக் கூறுகிறார். ஈசா நபியைப் பிடிக்க வந்த டி டியானஸ் என்பவரே சிலுவையில் பலியானார் என்று கூறுபவர்களும் உண்டு.

எது எப்படி இருப்பினும், இறைவன், ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவர்களின் தோழர்களில் ஒருவருக்கே எதிரிகளில் ஒருவருக்கோ ஈசா நபி அவர்களின் உருவத்தைக் கொடுத்து அந்த நபரையே சிலுவையில் மரணிக்கச் செய்தான் என்ற கூற்று சிந்திக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறைவன் இந்த நியாயமற்ற செயலை செய்தான் என்று இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை அரங்கேற்றினான் என்றோ கூறுவது அந்த இறைவனின் தூய தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும். 

ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களுக்கு இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படாமல் இருக்கவில்லை. அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருந்ததுமில்லை. 

ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களின் எதிரிகளால் நெருப்புக்குழியில் போடப்பட்டார்கள். அந்த ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அல்லாஹ் அவர்களை அந்த நெருப்புக் குழியிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றினான். அதுபோல ஹஸ்ரத் மூஸா(அலை) பிரௌனின் பிடியிலிருந்து காப்பாற்றினான். ஹஸ்ரத் யூனுஸ்(அலை) அவர்கள் கப்பலிலிருந்து கடலில் தள்ளப்பட்ட ஒரு மீனால் விழுங்கப்பட்ட நிலையிலும் இறைவன் அவர்களைக் காப்பாற்றினான். ஹஸ்ரத் யூசுப்(அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது அவர்களின் சகோதரர்களாலேயே கிணற்றில் தள்ளப்பட்டார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த தருணத்தில் இறைவன் அவர்களை ஒரு பயணக்குழு மூலம் காப்பாற்றினான். 

இந்த நபிமார்கள் எல்லாம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை அவர்களே நேரிடையாகச் தந்தித்தார்கள் . இறைவன் அவர்களைத் தனது வல்லமையால் காப்பாற்றி மீண்டும் மக்கள் முன்னால் உலவச் செய்தான். 

அவ்வாறே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் அவர்களே அந்த ஆபத்துகளை சந்திக்க வைத்து அவற்றிலிருந்து இறைவன் காப்பாற்றினான்.

இவ்வாறிருக்க, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர்களுக்குப் பகரமாக இன்னொருவரை அந்த ஆபத்தில் மாட்டி விட்டு ஈசா நபி அவர்களை இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? இத்தனை நபிமார்களுக்கு ஒரு நீதி, ஈசா நபி அவர்களுக்கு மட்டும் தனி நீதியா? 

உண்மையில், ஈசா நபி அவர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அவர்களே சிலுவையில் அறையுண்டார்கள். ஆனால் இறைவன் ஏனைய நபிமார்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது போன்று ஈசா நபி அவர்களையும் சிலுவையிலிருந்து காப்பாற்றினான். அவர்கள் அதில் மரணமடையாது உயிர்தப்பினார்கள். 

ஈசா நபி அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அதில் இறக்கவில்லை. இறைவன் அவர்களை அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினான். என்ற புதிய கருத்தை - பகுத்தறிவு ஏற்கின்ற கருத்தை அஹ்மதியா ஜமாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களே உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்தக்கருத்து திருக்குர்ஆன் வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ எவ்வகையிலும் முரண்படவில்லை.

சிலுவை சம்பவம் தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் அதாவது 4:158 ஆம் வசனத்தில் 'ஸலப' என்ற சொல் காணப்படுகிறது இது வெறுமனே சிலுவையில் அறையப்படுவதை குறிக்காது மாறாக சிலுவையில் அறிந்துக் கொல்லப்படுவதையே குறிக்கும். ஏனெனில் 'ஸலப' என்ற சொல் அரபி மொழியில், சிலுவையில் ஏற்றி எலும்பை முறித்தல் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. எனவே இந்த வசனத்திற்கு 'வ மா சலபஹு' என்ற சொற்றொடர் சிலுவையில் அறையப்படவேயில்லை என்று பொருள் படாது மாறாக சிலுவையில் அறைந்து கொல்லபபடவில்லை என்ற பொருளையே தரும்.

அடுத்து இந்த வசனத்தில் காணப்படும் ஷுப்பிஹலஹும் என்ற சொற்றோடருக்குத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் இன்னொருவர் அவரைப்போன்று ஆக்கப்பட்டார் என்று பொருள் தருகின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது இலக்கணப்படி முற்றிலும் தவறானதேயாகும். இங்கு இன்னொருவரை நுழைக்க வழியேயில்லை 'ஷுப்பிஹலஹும்' என்ற சொற்றொடருக்கு அவர் அவ்வாறு (சிலுவையில் கொல்லப்பட்டவர் போன்று) ஆக்கப்பட்டார் என்றோ அது (அந்நிகழ்ச்சி) சந்தேகத்திற்குரியதாக ஆக்கப்பட்டது என்றோதான் பொருள் கொள்ளமுடியும்.

எனவே ஈசா(அலை) அவர்களுக்குப் பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கூற்று அடிப்படையற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.

இரு ஈஸா நபிமார்களின் இரு வேறு தோற்றங்கள்.


ஹதீஸ்களிலும் காதியானிகள் கை வரிசை என்ற எனும் தலைப்பில் பக்கம் 56 இல் கூறுகிறார் நான் ஈஸாவையும், மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும், விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்) 

நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட பொது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)

............ஜக்து என்ற பதத்திற்கு சுருண்ட கேசம் என்பது மட்டும் பொருளல்ல. உறுதியான உடம்பிற்கும் ஜக்து என்று சொல்லலாம்.ஆனால் அது தனியாக ஜக்து என்று மட்டும்கூறப்பட்டிருப்பதால் சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. ஜக்து என்ற சொல்லுடன் க்ரு என்ற சொல் இணைக்கப்பட்டு ஜக்துக்ரு என்று கூறப்பட்டிருந்தால் மட்டுமே சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியும். குறிப்பிட்ட அந்த ஹதீஸில் ஜக்துக்கு முன்னாள் சிவந்த மேனி என்றும் ஜக்துக்கு பின்னால் அகன்ற நெஞ்சு என்றும் உடலின் அமைப்பைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் மத்தியில் உள்ள ஜக்து என்ற சொல்லுக்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. என்று அபூஅப்தில்லாஹ் எழுதுகிறார்.

நம் பதில்:

1. ஒரு வாதத்திற்காகக இந்த புளுகு மூட்டையை ஏற்றுக் கொண்டாலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹீ) அவர்கள் இரு நபிமார்களுடைய தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதவில்லை. என்பதைக் கவனித்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. முதலாவது ஹதீஸில் ஈஸா நபி (அலை) அவர்களை மூஸா நபி (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து அந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டவர் மூஸா நபியுடன் தொடர்புள்ள மஸீஹ் என்பது புலனாகிறது. இரண்டாவதாகக் கூறப்பட்ட மஸீஹ் பிற்காலத்தில் தோன்றுபவர் என்பதற்கு ஆதாரமாவது, அந்த ஹதீஸை தொடர்ந்து வரும் வாசகங்களில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தஜ்ஜாலின் குழப்பம்மிகுந்த காலத்தில் தோன்றுவார் எனக் கூறப்பட்டிருப்பதேயாகும். 

2. இப்னு மர்யம் தோன்றும் போது உங்களுடைய நிலைமை எவ்வாறு இருக்குமோ? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாம்மாக இருப்பார். (புகாரி முஸ்லிம் : நுஸுலிப்னு மர்யம்) எனும் நபி மொழியைக் கூறி உங்களிலிருந்து தோன்றி, உங்களுக்கு இமாமாக இருப்பார் என்று இந்த நபிமொழியில் வந்திருப்பதால் இதில்கூறப்பட்டிருப்பவர் முஸ்லிம்களிலிருந்தே தோன்றும் ஒருவர் என்பதை உறுதி செய்கிறது. 

3. உங்களுள் உயிருள்ளவர் ஈஸப்னு மர்யமைச் சந்திப்பார் அவர் மஹ்தியாகவும் தீர்ப்புவழங்குபவராகவும். நீதியை நிலைநாட்டுபவராகவும் விளங்குவார். (முஸ்னது அஹ்மதிப்னு ஹம்பல் – பாகம் 2, பக்கம் ) 

4. ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ் ஸமான்)

5. இதன் காரணமாகவே இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும் தத்தமது ஹதீஸ் தொகுப்புகளில் இப்னு மர்யமின் வருகையைப் பற்றியும் இமாம் மஹ்தியைப் பற்றியும் தனித்தனியாக வெவ்வேறு அத்தியாயங்கள் அமைத்து குறிப்பிடாமல் ஒன்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட ஐந்து ஆதாரங்களையும் அபூ அப்தில்லாஹ் வழக்கம்போல் பதில் தரவில்லை. 

ஜக்து என்ற சொல்லை ஆராயப் புறப்பட்ட அபூ அப்தில்லாஹ் இப்னு மர்யம் ஒரு நபிமொழியில் மூஸா (அலை) அவர்களுடனும் இன்னொரு நபி மொழியில் தஜ்ஜால் மற்றும் கஹ்பதுல்லாஹ்வுடனும் வருவதால் ,ஒருவர் இஸ்ரவேலர்களுக்காக வந்த ஈஸா(அலை) என்றும் மற்றொருவர் கஹ்பதுல்லாவுடன் தொடர்புடையவர் என்றும் பிரித்தறியதவறியது ஏன்? ஜஅது என்பதற்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது அண்டப் புழுகேயாகும். ஏனெனில் Islamic Universiy Madina – வின் Dr.Momammad Muhsin Khan ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள Sahih Bukhari Arabic English மொழியாக்கத்தில் பாகம் – 4 பக்கம் – 432-433 ஹதீஸ் எண் 648-649 இல் ஜஅது என்ற சொல்லுக்கு Curly Hair (சுருண்ட முடி) என்றே மொழி பெயர்த்துள்ளார்கள். தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹதீஸ் எண் 650இல் இரண்டு மஸீஹுகளைக் குறிப்பிட்டு ஒன்று ஸப்துஷ் – அர் இன்னொன்று ஜஅதுஎன வந்துள்ளது. அதாவது ஒருவர் நீளமான முடியுடையவரும் இன்னொருவர் சுருண்ட முடியுடையவரும் ஆவார் என்றே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழில் வெளிவந்த புகாரி மொழிபெயர்ப்பிலும் ஜஅத் என்ற சொல்லுக்கு சுருள் முடி உடையவர் என்ற மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.(ஆதாரம் புகாரி -3438)